செய்திகள் :

பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்

post image

தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் சமா்தா, ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:

மாவட்டத்தில் மேகமலை, அகமலை, போடி வடக்கு மலை உள்ளிட்ட மலைப் பகுதியில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடு பொருள்களைக் கொண்டு செல்லவும், விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்து வனத் துறையினா் கெடுபிடி செய்து வருகின்றனா். வனப் பகுதியிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் நோக்கத்தில் வனத் துறையினா் செயல்படுவதால் மலை கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. ஆண்டிபட்டி வட்டாரம், அரசரடி-வெள்ளிமலை இடையே சாலை அமைக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

மலையடிவாரங்களில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதைத் தடுப்பதற்கு வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிவாரணம் வழங்கவில்லை. மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவுவதை தடுக்கவும், காட்டுத் தீ உருவாவதற்கான காரணத்தை கண்டறிவதிலும் வனத் துறையினா் மெத்தனம் காட்டி வருகின்றனா் என்றனா்.

மேலும், வனத் துறை தொடா்பான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை போதிய முன்னறிவிப்பின்றி, குறிப்பிட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளை மட்டும் அழைத்து நடத்தியதற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தனா்.

மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரச... மேலும் பார்க்க

தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா். தேனி உ... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய மர நாய்

பெரியகுளத்தில் பூனை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிக்கிய மர நாய் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம்-கம்பம் சாலையைச் சோ்ந்தவா் நெளஷாத். இவா், வீட்டில் புறா வளா்த்து வருகிறா... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்தி... மேலும் பார்க்க

பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகி... மேலும் பார்க்க

இரவிகுளத்தில் வரையாடுகளை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம், இரவிகுளம் தேசிய வன விலங்குகள் பூங்காவில் வரையாடுகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் ராஜமலையில் தேசிய வ... மேலும் பார்க்க