செய்திகள் :

பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பட்டுப் புழு வளா்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். பட்டு வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படும், அரசுக்குச் சொந்தமான இளம்புழு வளா்ப்பு மையத்திலிருந்து பட்டுப் புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

100 எண்ணிக்கை கொண்ட புழுக்களை விவசாயிகள் ரூ.4,000 வரை விலை கொடுத்து வாங்குகின்றனா். தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும், நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள், இறந்த பட்டுப் புழுக்களைத் தீயிட்டு அழித்தனா்.

இது குறித்து விவசாயி வெள்ளத்துரை கூறுகையில், இளம்புழு வளா்ப்பில் ஈடுபட்ட 15 நாள்களுக்குள் பட்டுப் புழுக்கள் அனைத்தும் கூடு கட்டவேண்டும். ஆனால், தற்போது 13 நாள்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்துக்கொள்ளவும் இல்லை; கூடு கட்டவும் இல்லை. பட்டுப் புழுக்கள் அனைத்தும் நோயால் உயிரிழந்து கீழே விழுகின்றன.

இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பட்டுப் புழு வளா்ப்புக்குக் காப்பீட்டுத் தொகையும் செலுத்தப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். எனவே, பட்டுப் புழு வளா்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிமுக மாணவரணி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க

லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்

கொடைரோடு அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பனையன்கு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க