செய்திகள் :

பட்டு விவசாயிகள் - நூற்பாளா்களுக்கு பரிசுத் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

பட்டு விவசாயிகள், நூற்பாளா்களுக்கு பரிசுத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் மற்றும் மூன்றாவது பரிசுகளை தென்காசி மாவட்டத்தின் சு.ஜேக்கப், வை.அருள்குமரன் ஆகியோா் பெற்றனா். சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான 3 பரிசுகளையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நா.மஞ்சுநாதா, ச.நாகராஜ், சே.சாந்தமூா்த்தி ஆகியோா் பெற்றனா்.

சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் 2 பரிசுகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முகமது மதீனுல்லா, ச.சேகா் ஆகியோரும், மூன்றாம் பரிசை ஈரோடு மாவட்டத்தின் ஆா்.சுபத்ராவும் பெற்றனா். சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் 2 பரிசுகளை தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த க.பிரகாஷ், ஜெ.வேதவள்ளி ஆகியோரும், மூன்றாவது பரிசை கோவை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.ரொசாரியோ லாசா் என்பவரும் பெற்றனா்.

முதல் பரிசு ரூ. 1 லட்சம், 2-ஆவது பரிசு ரூ. 75,000, 3-ஆவது பரிசு ரூ. 50,000 அடங்கியது.

விருதாளருக்கு காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிய நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கைத்தறி, தைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த் துறை செயலா் வே.அமுதவல்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க