செய்திகள் :

பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

post image

உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் ரோஷினி நாடார் கைப்பற்றினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கடன்கள் அதிகரித்து, அவரது நிகர சொத்து மதிப்பில் ரூ. 1 லட்சம் கோடி கடந்தாண்டு குறைந்தது. இதன் எதிரொலியாக, உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வாய்ப்பை அம்பானி தவறவிட்டார். உலகளவில் 18 ஆவது இடத்தைப் பெற்றாலும், இந்திய அளவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஹுருன் ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 3,442 பில்லியனர்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேலும், இந்தப் பட்டியலில் 163 பேர் புதிதாய் சேர்ந்ததன் மூலம், இந்த எண்ணிக்கை கடந்தாண்டைவிட 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலின் உள்ளவர்களின் ஒட்டுமொத்த செல்வத்தில், இந்திய பில்லியனர்கள் 7 சதவிகிதம் பங்களிக்கின்றனர். முதல் 100 பணக்காரர்களில் இந்தியர்கள் 7 பேர் மட்டுமின்றி, இந்தியாவில் மட்டும் 284 பில்லியனர்கள் உள்ளனர்.

இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மும்பையில் 90 பேர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாதான் குடும்ப வணிகங்களில் அதிக சதவிகிதத்துடன் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிக்க:'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க