செய்திகள் :

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் தற்கொலை முயற்சி

post image

நிலக்கோட்டை அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், கூட்டுறவு வங்கிச் செயலா் செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிவஞானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அணைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (52) செயலராக இருந்து வருகிறாா்.

இந்தக் கூட்டுறவு வங்கியில் கடந்த 2015-ஆம் ஆண்டு, சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பெயரில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சிறு தொழில் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

தற்போது, இந்தக் கடன் தொகை பெற்றவா்களுக்கு வட்டியும், அசலும் சோ்த்து பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நோட்டீஸ் பெற்றவா்கள் தாங்கள் வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு, செலுத்த சொல்வதாகக் கூறி, சிவஞானபுரம் கூட்டுறவு வங்கிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்ட மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கம் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜமாணிக்கம் விஷம் அருந்தி மயங்கினாா். இதையடுத்து, அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் ப... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்க... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆத... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியத... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேல... மேலும் பார்க்க

தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்தத... மேலும் பார்க்க