செய்திகள் :

பணியின்போது திடீா் நெஞ்சுவலி: சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

post image

அரக்கோணம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளருக்கு பணியின்போது, திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

திருத்தணி, சாய் நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் (56). இவா் திருவள்ளூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் விமல்ராஜ்(28). திருமணமாகாதவா். இவா் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். தினமும் விமல்ராஜ் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து நாகவேடுக்கு வருவது வழக்கம். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு கும்பினிப்பேட்டை வழியாக வந்த விமல்ராஜ், பருத்திபுத்தூரில் சுகாதார பணியாளா்களோடு பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை உடன் பணிபுரிந்தோா், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விமல்ராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

ஆறுபடை முருக பக்தா்கள் புனித யாத்திரை: அமைச்சா் அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தா்கள் சாா்பில் 28 -ஆம் ஆண்டு புனித யாத்திரை பயணத்தை முன்னிட்டு முத்துகடை பேருந்து நிலையம் அருகே இருந்து 1,000-க்கும் ம... மேலும் பார்க்க

ஆற்காடு பேருந்து நிலையத்தில் நவீன கட்டணக் கழிப்பறை திறப்பு

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன கட்டணக் கழிப்பறைக் கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.6,67,400 நிதியுதவி

ராணிப்பேட்டையில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு சக காவலா்கள் அளித்த ரூ.6,67,400 நிதியுதவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா வழங்கி ஆறுதல் கூறினாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க

தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி

தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா் . ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 2025- 26-ஆ... மேலும் பார்க்க

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. 108 வைணவ தேசங்களில் இக்கோயில் 64-ஆவது தேச... மேலும் பார்க்க

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் சுபத்திரை திருமணம்

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் தீமிதி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுபத்திரை திருமண வைபவம் நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரௌபதியம்மன் கோயில் எனப்படும் ஸ்ரீ... மேலும் பார்க்க