செய்திகள் :

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிடும் காவல் ஆளிநா்களை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்து வருகின்றாா்.

இதன் ஒரு பகுதியாக, செஞ்சி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவரை விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட அவலூா்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலா் ஏழுமலை, பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28-ஆம் தேதி நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்டம், சித்தணி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பதிவெண் இல்லாத வாகனத்தை கண்டறிந்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலா் முருகவேல், முதல்நிலைக் காவலா் காா்த்திகேயன் ஆகியோருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் 4 உதவி ஆய்வாளா்களுக்கு எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கண்டற... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாக... மேலும் பார்க்க

கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூலை 1 க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க