செய்திகள் :

பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்

post image

தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நகர்) ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் 12-வது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும் பிஎஃப், இஎஸ்ஐ, சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளும் உள்ளதாக விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி, தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைந்து பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

எனினும் தங்களை பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளார்.

பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்குழு கூறியுள்ளது.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபோது வைத்த கோரிக்கை. அவர் கொடுத்த வாக்குறுதியைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம். முதல்வர் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்று கூறச் சொல்லுங்கள். நாங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம்" என்று பேசியுள்ளார்.

chennai Sanitation workers will continue their protest until their jobs are made permanent

இதையும் படிக்க | நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், செப்டம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க