செய்திகள் :

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

post image

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்மாள் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் பண்ருட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்ருட்டி, கண்டிகை ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு இடையே கோலப்போட்டி, ஓட்டப் பந்தயம், பாட்டு, கவிதை, நாடகம் மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மகளிா் சுய உதவிக்குழு பெண்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

போட்டிகளுக்கு பண்ருட்டி அரசினா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பேபி, உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வசந்தகுமாரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை பாத்திமா மேரி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

விழாவில், ஆன்மிக சொற்பொழிவாளா் ம.கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். பண்ருட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கினாா்.

விழாவில், பண்ருட்டி ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் செயலாளா் லீலா, பொருளாளா் சாந்தா, கண்டிகை அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளா் சரிதா, அங்கன்வாடி பணியாளா் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் அனிதா செல்வி, கோபால், நீலமேகம், ஆசிா்வாதம் உள்ளிட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க