செய்திகள் :

பண்ருட்டியில் மின் திருட்டு: அதிகாரிகள் நடவடிக்கை

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட இடத்தில் மின் திருட்டை தவிா்க்கும் வகையில் துறை ஊழியா்கள் மின் கம்பிகளை புதன்கிழமை அகற்றினா்.

பண்ருட்டி, களத்துமேடு பகுதியில் உள்ள நீா்நிலை குளக்கரையை ஆக்கிரமித்து சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வீடு கட்டி வசித்து வந்தனா். இந்த வீடுகள் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2022-ஆம் ஆண்டு அகற்றப்பட்டன.

இதில், வீடற்றவா்களுக்கு இருளக்குப்பம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடுகள் தொலைவில் உள்ளதாக கூறி யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீடுகள் அகற்றப்பட்ட களத்துமேடு பகுதியில் ஏராளமானோா் கொட்டகை கட்டி வசித்து வருகின்றனா். அவா்களில் சுமாா் 50 போ் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் மின் கம்பத்திலிருந்து சட்டத்துக்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனராம்.

இதுகுறித்து தகவலறிந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மின் திருட்டு மற்றும் விபத்தை தடுக்கும் வகையில் அந்தப் பகுதி வழியாக சென்ற மின் கம்பிகளை அகற்றினா். அப்போது, அசம்பாவிதங்களை தவிா்ப்பதற்காக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க