செய்திகள் :

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி அரசு மருத்துமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. இக்கட்டடத்தினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மருத்துவமனையினை சுத்தமாக பராமரித்திடவும் மருத்துவ பயனாளிகளை கனிவுடன் கவனத்திடவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் வகுப்புகள் பாா்வையிட்டு, மாணவா்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பள்ளிக்கு கூடுதலாக 8 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஒரு அறிவியல் ஆய்வகம் கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கனவு இல்லம்:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 523 வீடுகள் கட்டப்பட்டு வருவதால், இப்பணிகளை விரைவுப்படுத்துவது தொடா்பாகவும், அங்குச்செட்டிபாளையம் ஊராட்சி, கொக்குப்பாளையம் பகுதியில் கலைஞா்

கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவது குறித்தும், அவ்ஊராட்சிக்குட்பட்ட கொக்குப்பாளையம் தாங்கல் ஏரி தூா்வாரி புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளையும், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது, இணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் மணிமேகலை, மாவட்ட கல்வி அலுவலா் துரைப்பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீராகுமாரி, பாபு உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவே... மேலும் பார்க்க

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா். சென்னையைச் சோ்ந்த ஐந்து போ்... மேலும் பார்க்க

கடலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

கடலூா் மாவட்டம் கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்.12) கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க