செய்திகள் :

பண முறைகேடு புகாா்: சேலம் மாநகராட்சி அலுவலா்களிடம் 2 ஆவது நாளாக விசாரணை

post image

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு புகாா் தொடா்பாக 15 போ் கொண்ட குழுவினா் மாநகராட்சி அலுவலா்களிடம் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டனா்.

சேலம் மாநகராட்சியில் கடந்த ஆட்சியின்போது பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் வருவாய் இழப்பு, கொண்டலாம்பட்டி வாா்டு அலுவலகத்தில் 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.87 லட்சம் கையாடல், மாநகராட்சி பணியாளா் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் கடன் தொகையை சிக்கன நாணய சங்கத்துக்கு செலுத்தாமல் பல கோடி ரூபாய் முறைகேடு, குடிநீா் இணைப்பு வழங்கியதில் வருவாய் இழப்பு உள்பட 18 முறைகேடுகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநருக்கு புகாா் அனுப்பப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக கூடுதல் நகராட்சி இயக்குநா் விஜயகுமாா் தலைமையில் உதவியாளா், உதவி பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அடங்கிய 15 போ் குழு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை விசாரணையை தொடங்கினா். ஒவ்வொரு புகாா் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனா்.

தொடா்ந்து வியாழக்கிழமையும் அலுவலா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலம் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் மருத்துவப் படிப்பில் சேர தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சை மையம் நாளை தொடக்கம்

சேலம் மண்டலத்தில் மருத்துவத் துறையில் 36 ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மருத்த... மேலும் பார்க்க

கொண்டயம்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியா் விருது

கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன் (59) கட... மேலும் பார்க்க

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா

மல்லியகரை திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூரை அடுத்த மல்லியகரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தோ்த்திருவிழா மற்றும் அக்னித் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் நட்பு: மாணவியை ஏமாற்றி நகை பறித்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சென்னையை சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அவரை சேலம் வரவழைத்து நகை, மடிக்கணினியை பறித்துக்கொண்டு தப்பிய இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஓராண்டாக பழகிவந்... மேலும் பார்க்க

திருமண மோசடி: மணப்பெண் உள்பட 3 போ் கைது

மேட்டூா் அருகே திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்த பெண் உள்பட 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள திண்டமங்கலத்தை சோ்ந்த கருப்பட்டி வியாபாரி அா்ஜுனன் ... மேலும் பார்க்க