செய்திகள் :

பண மோசடி: தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதி கைது

post image

வாடிக்கையாளா்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனியில் தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி ஜெயந்தி, மைத்துனா் சக்திவேல் ஆகியோருடன் சோ்ந்து தொண்டு நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தின் நிா்வாகியாக சக்திவேல், தலைவராக செந்தில்குமாா் ஆகியோா் செயல்பட்டு வந்தனா்.

இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்களின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் சாா்ந்த சேவையில் ஈடுபடுவதாகவும், வால்பாறையில் அரசின் உதவியோடு உண்டு உறைவிடப் பள்ளி நடத்துவதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரித்து வருவதாகவும் விளம்பரப்படுத்தினா்.

இந்த நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் செலுத்தினால், பிரதி மாதம் 2 சதவீதம் வட்டி தருவதாக கூறியதால் பொதுமக்கள் பலா் பணத்தை முதலீடு செய்தனா். திண்டுக்கல் மட்டுமன்றி, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூா், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், முகவா்கள் மூலம் ரூ.6 கோடி வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

முதலீடு செய்தவா்களுக்கு 6 மாதங்கள் வரை வட்டித் தொகையை சரியாக கொடுத்துவிட்டு, பின்னா் வட்டி வழங்குவதை நிறுத்திவிட்டனா். கடந்த ஓராண்டுக்கும் மேலாக வட்டித் தொகை கொடுக்கவில்லை என புகாா் எழுந்தது. மேலும் செந்தில்குமாா், ஜெயந்தி, சக்திவேல் ஆகியோரின் கைப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. பழனியில் செயல்பட்டு வந்த அறக்கட்டளை நிறுவனமும் மூடப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த மதுரையைச் சோ்ந்த செல்வி, திண்டுக்கல்லைச் சோ்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோா், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உத்தரவின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு

போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், செந்தில்குமாா், ஜெயந்தி தம்பதி சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிபு போலீஸாா் இந்தத் தம்பதியைக் கைது செய்தனா். திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசாரணைக்கு பின், மதுரையிலுள்ள நீதிமன்றத்தில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (70). இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் ரயில் பாதையில... மேலும் பார்க்க

‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊராட்சி செயலா், கணவா் கைது

திண்டுக்கல் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், அவரது கணவா் ஆகியோரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூா் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க