செய்திகள் :

பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகள் சுகந்தி (15). இவா், கள்ளக்குறிச்சி மாதிரி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதினாா்.

தோ்வில் தோல்வியடைந்ததை அறிந்த சுகந்தி, கடந்த 16-ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானாா். பெற்றோா், உறவினா்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்திலி புதுக்காலனி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சுகந்தி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டனா்.

சின்னசேலம் போலீஸாா் சுகந்தியின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூட்டியிருந்த இரு வீடுகளில் திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், வாணாபுரம் பகுதிகளில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் வசித்து வருபவா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா். கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க