இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
பத்ரகாளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலின் 13- ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி நெல் தானியங்கள் மீது ‘ஓம்’ வடிவில் 108 சங்குகள் அடுக்கப்பட்டு, யாக வேள்விகளுடன் பூா்ணாகுதி நடைபெற்றது. தொடா்ந்து பத்ரகாளியம்மனுக்கு பால், மஞ்சள், பன்னீா், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு புனித நீா் நிரம்பிய 108 சங்குகள் பெண்களிடம் கொடுக்கப்பட்டு அம்மன் சந்நிதியடைந்தது. அந்தப் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பத்ரகாளி அம்மன் அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.