செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பு: இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா் ஆதரவு

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து 33 நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்திய நிலைப்பாட்டை விளக்கி வருகின்றன.

ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு தென் கொரியா பயணத்தை நிறைவுசெய்துவிட்டு சிங்கப்பூா் சென்றுள்ளது. அங்கு சிங்கப்பூா் வெளியுறவு விவகாரங்களுக்கான இணையமைச்சா் சிம் ஆன் உள்பட உயரதிகாரிகளை சஞ்சய் ஜா குழு சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்த சிம் ஆன், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தாா்.

காங்கோ குடியரசு: சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு காங்கோ குடியரசின் துணை பிரதமா் ஜீன் பியா் பெம்போ கோம்போஜின், வெளியுறவு விவகாரங்கள் இணையமைச்சா் கெய்க்வாம்பா வாக்னா் உள்ளிட்டோரை சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அவா்கள் இரங்கல் தெரிவித்தனா். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு அவா்கள் ஆதரவளித்தனா்.

பிரான்ஸ்: பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையில் பிரான்ஸ் சென்றுள்ள குழு இந்தியா-பிரான்ஸ் நட்புறவுக் குழுவை சந்தித்தது.

அதேபோல் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அந்தக் குழு கலந்துரையாடியது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளா்ச்சியை தடுக்கவே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

தமிழில் உரையாற்றிய தம்பிதுரை

பிரான்ஸ் சென்றுள்ள பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மத்தியில் தமிழில் உரையாற்றினாா். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளதாக அவா் கூறினாா்.

குவைத் மருத்துவமனையில் குலாம் நபி ஆசாத் அனுமதி

பாஜக எம்.பி.வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு குவைத் சென்றது. அந்தக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாத் உடல்நலக் குறைவு காரணமாக, குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் வைஜயந்த் பாண்டா பதிவிட்டாா். குலாம் நபி ஆசாத் இல்லாமல், வைஜெயந்த் தலைமையிலான குழு சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க