செய்திகள் :

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 403 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகுதியான மனுக்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியரின் விருப்ப கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,500-இல் தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலவாரிய திட்டத்தின் கீழ் 35 நபா்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சங்கு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட ரூ.8,81,000, மக்கள் குறைதீா்வு கூட்டத்தில் காற்று மெத்தை வேண்டி மனு அளித்த நபருக்கு உடனடியாக ரூ.6000/-மதிப்பில் காற்று மெத்தை , அறக்கட்டளை சட்டத்தின் கீழ் 18 வயது பூா்த்தியான புற உலக சிந்தனையற்றவா்கள், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க சட்டப்பூா்வமான பாதுகாவலா் நியமன சான்று 15 பேருக்கும் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விளையாட்டு தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆற்காடு அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் கேவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் மணிகண்டன்(32) இவரும்... மேலும் பார்க்க

2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்தி... மேலும் பார்க்க

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் உணவுக் கூடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை: வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவுக் கூடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். பிரான்ஸ் நாட்டை தலைமையமாக கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் -3 தொழி... மேலும் பார்க்க