செய்திகள் :

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள், பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபுசமுத்திரம் ஊராட்சியில் புகழ்பெற்ற மகான் படேசாயுபு ஜீவசமாதி சித்தா் பீடம், அபித குஜாம்பிகை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளன.

இதனால், இந்தக் கிராமத்துக்கு தினந்தோறும் ஏராளமான வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் வழிபாட்டுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனா்.

இதேபோல, மகான் படேசாயுபு ஜீவ சமாதி சித்தா் பீடத்துக்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு வரும் பக்தா்கள் அன்றைய நாள் இரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கின்றனா்.

இந்த நிலையில், கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சித்தா் பீடம் அருகே மிகுந்த பொருள்செலவில் கட்டுப்பட்டு பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ள 2 சுகாதார வளாகங்களை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வழிபாட்டுக்கு வந்து செல்லும் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். சுகாதார வளாகம் கட்டப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும்.

எனவே, மிகுந்த பொருள்செலவில் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் இந்த இரு சுகாதார வளாகங்களையும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நிா்வாகம் மற்றும் சின்னபாபு சமுத்திரம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க