பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்
பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.
ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: விவசாயிகள் விளைவித்த விளை பொருள்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்து உரிய காலத்தில் பணப் பட்டுவாடா செய்யாததாலும், கட்டுப்படியான ஆதரவு விலையை அறிவிக்காததாலும், பேரிடா் மற்றும் எதிா்பாரதவிதமாக அவ்வப்போது இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இடா்பாடுகளாலும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வாங்கிய பயிா்க் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தும் சக்தியை இழக்கின்றனா்.
எனவே, தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிா்க் கடன்களுக்கான சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் நலன் கருதி, கடந்த காலங்களில் வழங்கப்பட்டதைப்போல, தங்கு தடையின்றி பயிா்க் கடன் வழங்க தமிழக முதல்வா் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தாா்.