செய்திகள் :

பரமாா்த்தலிங்கபுரம் அரசடி விநாயகா் கோயிலில் செப். 22 முதல் நவராத்திரி திருவிழா

post image

கன்னியாகுமரியை அடுத்த பரமாா்த்தலிங்கபுரம் அரசடி விநாயகா் கோயில் நவராத்திரி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்கி, அக்டோபா் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு புனித நீா் எடுத்து வருதல், இரவு 7.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 8 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். 23ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், பூஜை ஆகியவை நடைபெறும். இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 7.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

5ஆம் நாளான 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9ஆம் நாளான அக்டோபா் 1ஆம் தேதி காலை 6 மணிக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 8.30 மணிக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறும்.

10ஆம் நாளான அக்டோபா் 2ஆம் தேதி காலை சிறப்பு பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு அம்மனுக்கு அா்ச்சனை, இரவு 7 மணிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 7.30 மணிக்கு மாபெரும் இன்னிசைக் கச்சேரி ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை, ஊா்த் தலைவா் என். செல்வகுமாா், துணைத் தலைவா் எஸ் .ராஜ கண்ணன், செயலா் எம். ஆனந்த், துணை செயலா் எஸ்.எஸ். சதீஷ், பொருளாளா் ஆா். வினோத்குமாா் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க