செய்திகள் :

பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயம்

post image

திருநெல்வேலியில் பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயமடைந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன்(68). கிராம உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை பெற்றாா். பின்னா் நீதிமன்ற மேல்முறையீட்டில் வாழ்நாள் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் ஒரு மாத கால பரோல் விடுப்பில் வெளியே வந்திருந்த சங்கரநாராயணன், தச்சநல்லூா் பாலாஜி அவென்யூ பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே காயங்களுடன் கிடந்தாா். தகவலறிந்ததும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சங்கரநாராயணனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவா் ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா். கிளை ச... மேலும் பார்க்க

தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி

அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமா... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் ஊராட்சி கட்டனேரி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்... மேலும் பார்க்க

வள்ளியூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வீட்டின் மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். வடக்கன்குளம் அ... மேலும் பார்க்க