செய்திகள் :

பர்கூர்: சிதிலமடைந்து இடியும் நிலையில் வீடுகள்; அச்சத்துடன் வாழும் பழங்குடிகள் - கண்டுகொள்ளுமா அரசு?

post image

பர்கூர் அருகே சிதலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது குடியிருப்புகளை புனரமைக்காமல் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் - ஜெகதேவி சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடி பழங்குடியின மக்களுக்காக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் அனைத்தும் தற்போது சேதமாகி உள்ளது. இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 3 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சிதலமடைந்த வீடு

இந்நிலையில், தங்களது வீடுகளை புனரமைக்கமால், சேதமான வீடுகளை அகற்றிவிட்டு 'கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்' புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கைக்குழந்தைகளுடன், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள் கூறும்போது, "நாங்கள், 100 நாள் வேலை திட்டம், காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் உள்ளிட்டவை சேகரித்து கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்தனர். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 2 முதல் 4 குடும்பத்தினர் வசிக்கிறோம். இந்தத் தொகுப்பு வீடுகள் அனைத்தும் சிதலமடைந்து, 95 சதவீதம் சேதமாகி உள்ளது. இந்த சேதமான தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு, தற்போது உள்ள குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.

சிதலமடைந்த வீடு

ஆனால், புதிய வீடுகள் கட்டித் தருவதற்குப் பதிலாக சேதமான வீட்டை புனரைமத்து தருவதாக அலுவலர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகுப்பு வீடுகள் சீரமைத்தாலும் பயன்படுத்த முடியாது. எனவே, சிதலமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்" என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த விளிம்பு நிலை மக்களின், தவிப்பை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து... மேலும் பார்க்க

India - Russia: "இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் ரஷ்ய அதிபர் புதின்"- பிரதமர் மோடி சொன்ன தகவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ர... மேலும் பார்க்க

"திமுக-தான் போலி வாக்காளர்களால் வெற்றி பெற்றது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அர... மேலும் பார்க்க

தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது புளியங்குடி. இந்தப் பகுதியில் யானை, காட்டுப் பன்றி எனக் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதும், அதனை மக்கள் மீண்டும் காட்டுக்குள் ... மேலும் பார்க்க

`முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வீட்டுக்கே வரும்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆந்திர பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே வந்து தரும்படியிலான திட்டம் தொடங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனப் ப... மேலும் பார்க்க

கேரள அரசுடன் இணைந்து பணியாற்ற Vloggers, Youtubers, Instagram இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு

கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 'Vloggers, Youtubers, Instagram, Facebook' உள்ளிட்ட சமூக ... மேலும் பார்க்க