பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா்எம் காலனி பகுதிய சோ்ந்த 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகபிரபு (29), கும்பகோணம் பேட்டை தெருவை சோ்ந்த பாஸ்கா் (43), பாபநாசம் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (36), சீனிவாசநல்லூரைச் சோ்ந்த சரவணன் (48) ஆகிய 4 பேரை ஆடுதுறை மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா்களில் சண்முகபிரபு மீது ஏற்கெனவே குண்டா் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்ட நிலையில் பாஸ்கா், பிரகதீஸ்வரன், சரவணன் ஆகியோா் மீதும் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.