செய்திகள் :

பலுச். விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுகள்: அமெரிக்கா அறிவிப்பு!

post image

பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பல கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கனிம வளம் மிக்க மலைகள் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில், தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பலுசிஸ்தான் விடுதலைப் படை கோரிக்கை வைத்துவந்தது. இதனிடையே பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு, தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வந்தது.

பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டுவந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை, 2024 ஆம் ஆண்டு கராச்சி விமான நிலையம் மற்றும் குவெட்டா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலிலும் ஈடுபட்டது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்திய பலுசிஸ்தான் விடுதலைப் படை, அப்போது நடத்திய தாக்குதலில் ஒன்றுமரியா பயணிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது ரயிலில் இருந்த 300-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர்.

இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

US declares Balochistan Liberation Army, Majeed Brigade as terror groups

இதையும் படிக்க : ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

டிரம்ப் வரியால்.. அமெரிக்கர்களுக்கு கானல் நீராகுமா காபி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுடனான வர்த்தகத்துக்கு விதித்து வரும் புதிய வரி விதிப்பு முறையால், வரி விதிப்பை சந்திக்கும் நாடுகளோடு சேர்த்து, அமெரிக்கர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.இந்த ... மேலும் பார்க்க

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ர... மேலும் பார்க்க

பலூச் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல.. பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டவர்கள்: மனித உரிமை அர்வலர்கள்!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை பயங்கரவாதக் குழுக்களாக அமெரிக்க அறிவித்துள்ளதற்கு, அந்நாட்டின் மூத்த மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தள... மேலும் பார்க்க

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்த... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு கா... மேலும் பார்க்க

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியத... மேலும் பார்க்க