செய்திகள் :

பலூச். விடுதலைப் படை தாக்குதல்: பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலி

post image

பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர்.

தி பலூசிஸ்தான் போஸ்ட் தெரிவித்திருப்பதாவது, ஜீயாண்ட் பலோச், குழுவின் போராளிகள் மஸ்துங், கலாட், ஜமுரன், புலேடா மற்றும் குவெட்டா உள்பட பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் மூத்த அதிகாரி உள்பட 23 பேர் பலியாகினர்.

மேலும் , உளவுத்துறையுடன் தொடர்புடைய ராணுவ சொத்துக்களுக்கும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. ஜூலை 22 அன்று காலாட்டின் கோஹாக் பகுதியில் மிகவும் குறிப்பிடத்தக்க மோதல்களில் ஒன்று நடந்ததாக பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தெரிவித்துள்ளது.

அங்கு முன்னேற முயன்ற பாகிஸ்தான் படைகள் பதுங்கியிருந்து தாக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் மூன்று இராணுவ வாகனங்கள் நேரடியாகத் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்த 13 பேர் சுற்றிவளைக்கப்பட்டு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!

பாகிஸ்தானில் தங்களுக்கென தனி நாடு வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலை படையினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக கடந்த மே மாதம் பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்திருந்தார்.

ஆனால், பாகிஸ்தான் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீதும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The Baloch Liberation Army (BLA) has asserted responsibility for a series of simultaneous armed operations throughout various areas of Balochistan, claiming that its fighters killed a minimum of 23 members of the Pakistani military, including a high-ranking office The Balochistan post reported.

காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும... மேலும் பார்க்க

173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!

அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விப... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம்!

அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நுழைந்த ஒருவர், திடீரென ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மூன்று நாள்களாக மோதல்போக்கு நீடித்து ... மேலும் பார்க்க

அமெரிக்கா தரையை நோக்கிப் பாய்ந்த விமானம்

அமெரிக்காவில் சௌத்வெஸ்ட் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையை நோக்கிப் பாய்ந்ததில் 2 பணிப் பெண்கள் காயமடைந்தனா். அந்த விமானத்துக்கு அருகே மற்றொரு விமானம் வருவதாக ... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்ற... மேலும் பார்க்க