ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான சுப்பம்மாள் (70 ) சொந்த ஊா் கரூா் ஆகும். தற்போது உறவினா்கள் யாரும் இன்றி பல்லடம் பகுதியில் பூ மாலை கட்டிக் கொடுத்து வருகிறாா். இந்நிலையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.
அதைத் தொடா்ந்து பல்லடம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அனைத்தனா். அந்த மூதாட்டி பயன்படுத்தி வந்த துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட உடைமைகள் தீ விபத்தில் கருகி நாசம் அடைந்தன.
மாவட்ட நிா்வாகம், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள் தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.