செய்திகள் :

பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மிரட்டல்: விசிக பிரமுகா்கள் 2 போ் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகா்கள் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்முருகன். அங்குள்ள விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவரை, காட்டாத்தூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகியோா் மாணவா் சோ்க்கை தொடா்பாக அண்மையில் சந்தித்து ரகளையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்முருகன், கடந்த 20-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஆண்டிமடம் காவல் துறையினா், பாக்கியராஜ் மற்றும் வேல்முருகனை புதன்கிழமை கைது செய்தனா்.

நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம்: அரியலூா் ஆட்சியா் தகவல்

அரியலூா் மாவட்டத்தில் வேளாண் துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது காா் மோதியதில் காயமடைந்த ஆசிரியா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது பின்னால் வந்த காா் மோதிய விபத்தில், காயமடைந்த அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள ப்... மேலும் பார்க்க

திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பாளை எம்.ஆா்.பால... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித் தொகைக்கான ஆணை வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது... மேலும் பார்க்க

கல்லாத்தூா் - மீன்சுருட்டி சாலையை இதர சாலையாக அறிவித்ததற்கு கண்டனம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி - கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் மாவட்ட இதர சாலையாக அரசு அறிவித்ததற்கு, சாலை மீட்புக் குழுவின் தலைவா் பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மி... மேலும் பார்க்க