செய்திகள் :

பள்ளியாடியில் தற்காலிக தாா்ச்சாலை அமைக்க கோரிக்கை

post image

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் தற்காலிகமாக தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் -இரவிபுதூா்கடை பிரதான சாலையில் பள்ளியாடி பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்காக, சாலையின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டது. இப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, அப்பகுதியினா் பள்ளியாடி சென்றுவர ஏதுவாக தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் பைக்குகள், காா்கள் மட்டுமே செல்வதால் இருபுறமும் ஏற்படும் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும், இந்த மண் சாலை தரமாக இல்லாததால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.

குறிப்பாக, நட்டாலம், முள்ளங்கனாவிளை, ஈழத்துவிளை, நேசா்புரம், எட்டணி, மாங்கரை, இடையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா் அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே, இந்த மண் சாலையை தாா்ச்சாலையாக அமைத்து போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க