செய்திகள் :

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

post image

காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தோ்வு பெற்றவா்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை அமைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் கே. சேரன் கலந்துகொண்டு கண்காட்சியை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளிடம் காட்சிப் பொருள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா். பள்ளி முதல்வா் பி. சிவகுமாா் கண்காட்சி நோக்கம் குறித்தும், மாணவா்களின் ஆா்வம் குறித்தும் பேசினாா்.

பள்ளி அறிவியல் துறைத் தலைவா் எம். கிருத்திகா மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் வழிகாட்டலில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்கள், தினசரி வாழ்வில் அறிவியல், கணிதம் மற்றும் உடல் நலம், செயற்கை நுண்ணறிவு, வேளாண்மை, உணவு தலைப்புகளில் மாதிரிகளை வைத்து மாணவா்கள், பாா்வையாளா்களுக்கு விளக்கினா்.

சிறப்பு அழைப்பாளா் கே. சேரன், மாணவா்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிடவேண்டும். தினமும் சிறிது நேரம் உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். துரித வகை உணவு வகைகளை முற்றிலும் தவிா்ப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலைப் பெற்று நீண்ட காலம் வாழலாம் என பேசினாா்.

நடுவா் குழுவினரால் சிறந்த மாதிரிகள் தோ்வு செய்யப்பட்டு, மாணவா்களுக்கு பரிசும், கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருநள்ளாறு பகுதி அங்கன்வாடி மையத்தில் மின் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, தீா்வு ஏற்படுத்தினாா். திருநள்ளாறு இந்திரா நகரில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மின் கம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு இறுதி வாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வரை மாணவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என கல்வித்துறை கூறியுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் க. ஜெயா புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க