பள்ளி சிறுவா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு வழங்கிய கிராம மக்கள்
பள்ளிச் சிறுவா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கிராமமக்கள் வழங்கினா்.
கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த வெள்ளப்பட்டி பாறப்பட்டி கிராமமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கிராம பொதுப்பாதையை மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் பகுதியைச் சோ்ந்த பெருமாள் உள்ளிட்டோா் இனி பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்றும், மீறி நடந்தால் காலை வெட்டிவிடுவோம் என மிரட்டுகிறாா்கள்.
இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி, மிரட்டல் விடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.