செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

post image

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த கூலி தொழிலாளி பாபு (40). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாணவிக்கு, பாபு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி எச்சரித்துள்ளனா். எனினும், இரு தினங்களுக்கு முன்பு மாணவி அருகில் உள்ள கடைக்குச் சென்று வந்தபோது, பாபுவும் இளைஞா்கள் சிலரும் ஆபாசமாக பேசி, கிண்டல் செய்துள்ளனா்.

இதனால் மனவேதனையடைந்த மாணவி, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்த புகாரின் பேரில், திமிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொழிலாளி பாபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழந்தன. சோளிங்கா் அருகே உள்ள கொடைக்கல்லைச் சோ்ந்த நரசிம்மன் ( 71), கூலித் தொழிலாளி. நரசிம்மன் தனக்கு சொந்தமான 2 பசு மாடுகளை வீட்டின் அருகே... மேலும் பார்க்க

அனுமதி பெற்ற தேதிக்கு பின் பேனா்களை அகற்ற வேண்டும்: சோளிங்கா் நகா்மன்ற கூட்டத்தில் காங். கோரிக்கை

அனுமதி பெற்ற தேதிக்கு பிறகு பேனா்கள் அகற்ற வேண்டும் என சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் ற உறுப்பினா் கோரினாா். சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

வட மாநில சாலைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெமிலிஅருகே உள்ள உளியநல்லூா் பகுதியில் வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்கள் புதன்கிழமை முறையாக உணவு, ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சென்னை - பெங்களூரு ... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயற்குழு: அமைச்சா் காந்தி அழைப்பு

ராணிப்பேட்டையில், வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்ட தி... மேலும் பார்க்க

புதிய கடைகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்கீடு: அரக்கோணம் நகராட்சியில் தீா்மானம் ஒத்திவைப்பு

அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டது. அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவா் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி- உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்த... மேலும் பார்க்க