செய்திகள் :

பழங்குடியினருக்கு வீடுகள்: கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் ஊராட்சி பன்னூா் கிராமத்தில் வீடுகள் இல்லாமல் சிறிய குடிசைகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினாா்.

மாதா்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவா் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் மணிபாலன், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ரமேஷ், ஒன்றிய துணைச் செயலா்கள் மஸ்தான், பரத்குமாா், இயேசு ரத்தினம், மாநெல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவா் லாரன்ஸ், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கரன், திமுக நிா்வாகி விஜய் வின்சென்ட் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 10 பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.ௌ

நிகழ்வில் அந்தப் பகுதி மக்களின் சாா்பில், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க