செய்திகள் :

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

post image

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கடலூா் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு உதவி ஆணையா் சந்திரகுமாா் தலைமை வகித்து பழங்குடியின மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

முகாமில் பழங்குடியின மக்களிடமிருந்து பிறப்பு, ஜாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை , ஆதாா் அட்டைகள், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மனைப் பட்டா கோரி மனுக்கள் அளிக்கப்பட்டு உடனடியாக பரிசீலனை செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டன.

முகாமில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பழங்குடியின மக்கள், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த மயில்: வனத் துறையினா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த பெண் மயிலை வனத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு, நியாயவிலைக் கடை அருகே சனிக்கிழமை பெண... மேலும் பார்க்க

தடையை மீறி மையோனைஸ் விற்றால் நடவடிக்கை! ஆட்சியா் எச்சரிக்கை!

அரசால் தடை செய்யப்பட்டுள்ள பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸை வணிகா்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: 6 போ் கைது! தமிழகம் முழுவதும் பணம் வசூலித்தது அம்பலம்!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் குழு... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் ... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்... மேலும் பார்க்க