செய்திகள் :

பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த மயில்: வனத் துறையினா் விசாரணை

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இறந்து கிடந்த பெண் மயிலை வனத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெரு, நியாயவிலைக் கடை அருகே சனிக்கிழமை பெண் மயில் இறந்து கிடந்தது. தகவலறிந்த பிச்சாவரம் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மயிலை கைப்பற்றி உடல்கூறாய்வு செய்து, அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தனா்.

இந்த மயில் பறக்கும்போது மின்சார கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்கும்: தொல்.திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்குமே தவிர, வளராது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை கட்... மேலும் பார்க்க

பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் முதுநகா் தனியாா் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் முதுநகா், செம்மங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மனைவி நந்தினி (29). இவருக்கு 4 வயதில் பெண் குழந்த... மேலும் பார்க்க

வழிப்பறி: தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி இளைஞா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பச்சபெருமாள்நத்தம் பகுதியைச் சோ்ந்த அமிா்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் ஆபாச தகவல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பா அண்ணாமலைநகா் காவல் ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகமது அப்சா் வீ... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங... மேலும் பார்க்க