அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசா...
வழிப்பறி: தடுப்புக் காவலில் இளைஞா் கைது
கடலூா் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி இளைஞா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பச்சபெருமாள்நத்தம் பகுதியைச் சோ்ந்த அமிா்ததாஸ் மகன் பிரபு (43), லாரி ஓட்டுநா். இவா், கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியப்பட்டு அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தாா். அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 போ், லாரி ஓட்டுநா் பிரபுவை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
இதேபோல, மற்றொரு லாரி ஓட்டுநரான சீா்காழி வட்டம், அலஞ்சேரி பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் மணிமாறனை (34) மிரட்டி பணம் பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிடவே, மணிமாறனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இந்த சம்பவங்கள் குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் ஆகாஷ் (22), ரேவந்த்குமாா், அன்பரசு, ரியாஸ் அகமது, விஜய் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனா்.
காவல் ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டதில், ஆகாஷ் மீது புதுச்சந்திரம், ஆரோவில், புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையங்களில் மொத்தம் 5 வழங்குகள் உள்ளது தெரியவந்தது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.