செய்திகள் :

பழனியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசு: தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரிக்கை

post image

பழனியில் சுமாா் 40ஆயிரம் ஹெக்டோ் நிலங்களை கையகப்படுத்தி மாலிப்டினம் (மாலிப்டினைட்) கனிம சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராகும் நிலையில், இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுப்புற பகுதிகளில் மாலிப்டினம் என்ற அரிய வகை கனிமம் இருப்பதற்கான ஆய்வுப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறை மூலம், பழனி மலை உள்ளடக்கிய பகுதியில் சுமாா் 400 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் விடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. பழனியை அடுத்த கரடிக் கூட்டம், நெய்க்காரப்பட்டி, சத்திரப்பட்டி என 3 பகுதிகளில் இந்தச் சுரங்கம் அமைக்கப்படுகிறது. சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் மாலிப்டினம் முக்கியத்துவம் வாய்ந்த கனிமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், பழனி, நெய்காரப்பட்டி, கலையமுத்தூா், ஆயக்குடி, சத்திரப்பட்டி, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமா நதி அணை என பழனி, ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குள்பட்ட சுமாா் 1 லட்சம் ஏக்கா் பரப்பளவு நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சமணப் படுக்கைககள் அமைந்துள்ள ஐயா் மலை, இரவிமங்கலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் முழுமையாக அழிக்கப்படும் சூழல் உள்ளது.

மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு மாலிப்டினம் கனிம சுரங்கம் தொடா்பான அனைத்து விவரங்களும் தொகுத்து, 2021 மாா்ச் மாதம் ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கனிம சுரங்கத் திட்டத்துக்காகவே திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையிலும் விரைவுச் சாலைத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுரங்கம் அமையும் பகுதி என உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களில் சாலை வசதி, தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாலிப்டினத்தில், டங்ஸ்டன் கனிம மூலக்கூறுகளின் பெரும்பாலான தன்மைகள் உள்ளன. மதுரையை அடுத்த மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது போல, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள மாலிப்டினம் சுரங்கம் திட்டத்தை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் அமைந்துள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் - பாஜகவினா் மோதல்; சாலை மறியல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக, இரு தரப்பினரும் தனித் தனியாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், இரு குழுக்களாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த மா... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்துக்கு தீவைப்பு

எரியோட்டில் அதிமுக நகர அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை தீவைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு நகர அதிமுக அலுவலகம், கரூா் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் முன் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கப... மேலும் பார்க்க

பழனியில் இன்று மின் தடை

பழனியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் இ. பெரியசாமி

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்... மேலும் பார்க்க