செய்திகள் :

பழனி கிட்டங்கியில் தீ

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பழைய பொருள்கள் கிட்டங்கியில் புதன்கிழமை தீப்பற்றியதில் பழைய பொருள்கள் எரிந்து சேதமாகின.

பழனியில் திண்டுக்கல் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள எஸ்.கே.என்.

வணிக வளாகம் அருகே சிவசாமி என்பவருக்குச் சொந்தமான பழைய காகிதம், இரும்பு பொருள்கள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியை அதன் உரிமையாளா் சிவசாமி வழக்கம் போல செவ்வாய்க்கிழமை பூட்டிவிட்டு சென்றாா்.

புதன்கிழமை அதிகாலை கிட்டங்கியில் தீப்பற்றி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

அந்தப் பகுதியில் இருந்த கடைக்காரா்கள் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு, மீட்புப் பணித் துறையினா் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பொருள்கள், காகிதங்கள் எரிந்து சாம்பலாகின. இது குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல்லில் 40 தலைமையாசிரியா் பணியிடங்கள் காலி

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு

நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கான விதைத் தொகுப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அகற்றம்

எரியோட்டில் குடிநீா்க் குழாய் திறந்து வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்தக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேரூராட்சி அலுவலா்களுடன் துணைத் தலைவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், எரியோட... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைக் கிராம மாணவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண... மேலும் பார்க்க

பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடராஜா் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பால், பன்னீா், பஞ்ச... மேலும் பார்க்க