செய்திகள் :

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்தா்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் கிரிவலப் பாதையில் உள்ள ‘ரோப் காா்’ நிலையம், ‘வின்ச்’ நிலையம், பாத விநாயகா் கோயில், படிப்பாதை நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிற கோயில்களுக்கும் பக்தா்கள் சென்று வர வசதியாக கோயில் நிா்வாகம் இலவச மின்கல வாகனங்களை இயக்கி வருகிறது.

இவற்றின் மூலம் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மின்கல வாகனத்தில் ஏறி கிரிவலப் பாதையில் எளிதாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில் சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பில் 23 போ் அமா்ந்து செல்லும் வகையில் ரூ.15 லட்சத்தில் மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயில் முன் மின்கல வாகனத்துக்குப் பூஜை செய்யப்பட்டு, வாகனத்தின் சாவியை லலிதா ஜூவல்லரி உரிமையாளா் கிரண்குமாா் வழங்க, கோயில் இணை ஆணையா் மாரிமுத்து பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் பாலசுப்ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் பிரதிநிதி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வாகனம் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்பட்டது. இதன் மூலம் பழனி கிரிவலப் பாதையில் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்படும் மின்கல வாகனங்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்தது.

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநியாகா் கோயிலிலுள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக... மேலும் பார்க்க

பழனியில் ஆடிக் கிருத்திகை விழா

பழனி மலைக் கோயிலில் ஆடி மாத இரண்டாவது கிருத்திகையை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை திரண்டனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சனிக்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானலில் சனிக்கிழமை பல மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின்... மேலும் பார்க்க

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க