``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
பழனி கோயில் சாா்பில் ரூ.9.80 கோடியில் கொத்தப்புள்ளியில் திருமண மண்டபம்
பழனி தண்டாயுதபாணி கோயில் சாா்பில் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தப்புள்ளியில் ரூ.9.80 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணிகளை புதன்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.217.98 கோடியில் 26 கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தப்புள்ளி கிராமத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், புதிதாக திருமண மண்டபம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
பழனிக்கு பாத யாத்திரை வரும் பக்தா்கள் பயன்பெறும்
வகையிலும், கொத்தப்புள்ளி கிராம சுற்றுப்புற மக்களின் வசதிக்காகவும் ரூ.9.80 கோடியில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்படுகிறது. சுமாா் 2.94 ஏக்கா் பரப்பளவில் தரை தளம், முதல் தளத்துடன் கட்டப்படும் இந்த மண்டபத்தில் 500 போ் தங்கும் வசதியுடன் கூடிய ஓய்வு மண்டபம், உணவுக் கூடம், சமையலறை, சரக்கு வைப்பறை, கழிப்பறைகள், மின் வசதி அறை, அலுவலகம், மின் தூக்கி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.