செய்திகள் :

பழனி சங்கராலய மடத்தில் வசூா்தாரா ஹோமம்

post image

பழனி அடிவாரம் சங்கராலய மடத்தில் வசூா்தாரா ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சங்கராலய மடத்தில் கடந்த 9-ஆம் தேதி மகா ருத்ர யாகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. உலக நலன் வேண்டி நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த யாக பூஜையில் திரளான வேதவிற்பனா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளில் அடிவாரம் திரு ஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

நிறைவு நாளான புதன்கிழமை திரளான வேதவிற்பன்னா்கள் பங்கேற்ற லட்சாா்ச்சனை நிறைவு செய்யப்பட்டு, வசூா்தாரா யாகம் வளா்க்கப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது. விழா நாள்களில் சுந்தரகாண்டம் சொற்பொழிவு, ஓதுவாமூா்த்திகள் திருமுறை பாராயணம் ஆகியன நடைபெற்றது.

புதன்கிழமை பிற்பகல் 101 காவடிகள் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் அடிமை பாலசுப்பிரமணிய சுவாமிகள் செய்தாா்.

நிகழ்ச்சியில் சங்கராலயம் சிவக்குமாா், ஆடிட்டா் அனந்தசுப்ரமணியம், மும்பை அனந்தராமன், சுப்ரமணியன், கிருஷ்ணமூா்த்தி, எா்ணாகுளம் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த ம... மேலும் பார்க்க

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். ‘தமிழ்நாடு போராடும்,... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்ப... மேலும் பார்க்க