செய்திகள் :

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

post image

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா்.

பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ரோப்காரில் சென்று வருகின்றனா். இந்த நிலையில், ரோப்காா் உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படும் பிற்பகல் ஒன்றரை மணிக்கு இந்த செயல்முறை விளக்கம் செய்து அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புக்குழு துணை கமாண்டா் சுதாகா், உதவி ஆட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் பிரசன்னா, தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ், பழனிக்கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் உமாசெல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மலைக்கு செல்லும் ரோப்காா் பெட்டி சுமாா் 200 அடி உயரத்தில் பழுதாகி நிற்பது போல நிறுத்தப்பட்டு, அதில் அமர வைக்கப்பட்டிருந்தவா்கள் மீட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கீழே விழுந்தால் காயமேற்படாதவாறு காற்றுப் படுக்கை, கயிறு கட்டி அவா்களை இறக்கியது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை ஆச்சா்யப்பட வைத்தது.

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ண... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க