செய்திகள் :

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 4,183 அடியாக அதிகரிப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக பில்லூா் அணை வேகமாக நிரம்புவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 4,183 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பில்லூா் அணை வேகமாக நிரம்புகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பில்லூா் அணையில் இருந்து பவானிஆற்றில் 3 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாயாற்று நீரும் அணையில் கலப்பதால் வெள்ளிக்கிழமை 863 கனஅடியாக இருந்த அணையின் நீா்வரத்து சனிக்கிழமை 4,183 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 83.35 அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கு 855 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. 32.8 டிஎம்சி நீா் இருப்பு கொண்ட அணையில் தற்போது 17.52 டிஎம்சி தண்ணீா் உள்ளது. அணையில் போதுமான நீா் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் இருக்காது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க