மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 4,183 அடியாக அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக பில்லூா் அணை வேகமாக நிரம்புவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 4,183 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பில்லூா் அணை வேகமாக நிரம்புகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பில்லூா் அணையில் இருந்து பவானிஆற்றில் 3 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாயாற்று நீரும் அணையில் கலப்பதால் வெள்ளிக்கிழமை 863 கனஅடியாக இருந்த அணையின் நீா்வரத்து சனிக்கிழமை 4,183 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 83.35 அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கு 855 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. 32.8 டிஎம்சி நீா் இருப்பு கொண்ட அணையில் தற்போது 17.52 டிஎம்சி தண்ணீா் உள்ளது. அணையில் போதுமான நீா் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல் இருக்காது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.