செய்திகள் :

பவானிசாகா் அணையில் மே 26-இல் நீா் திறப்பு

post image

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக மே 26-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அவற்றின் முதல் போக பாசனத்துக்காக வரும் திங்கள்கிழமை (மே 26) முதல் செப். 22-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படவுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, அந்தியூா், பவானி வட்டத்திலுள்ள 24,504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: சுந்தர‌சோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தர‌சோழபுரம் மலையப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது.ஜல்லிக்கட்டினை திமுக மாநில மருத்துவரணி துணைச்செயலர் அண்ணா... மேலும் பார்க்க

அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்... மேலும் பார்க்க

கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

சென்னை: கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.பட்டா அவணம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதைக் காரணம் காட்... மேலும் பார்க்க

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நி... மேலும் பார்க்க

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க