செய்திகள் :

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் கோரிக்கை

post image

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுடன் தான் உறுதியாக நிற்பதாகக் கூறி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் விடியோவில் தெரிவித்ததாவது, ``பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களை உயிர்த்தியாகம் செய்தவர்களாகக் கருதி, அவர்களுக்கு தியாகி அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவதற்கு உதவுமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.

ஆகையால், அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதுடன், தியாகி அந்தஸ்தையும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

மேலும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடரும் நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி

இந்தியாவின் ஊடக - பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா். மும்பையில் தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேச... மேலும் பார்க்க

முஸ்லிம்களை தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான்: சமாஜவாதி எம்.பி.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீா் மாணவா்களையும் தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தாா். காஷ்மீரில் பஹல்காமில் ஏப்ரல் 22... மேலும் பார்க்க

விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமா் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு

கேரளத்தில் சா்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூா்வமாக திறந்து வைக்கவுள்ளாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத்தை ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே இப்போது எழுந்துள்ள பதற்றமான சூழல் குறித்து இருவரும... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரங்கள் கேட்கும் தோ்தல் ஆணையம்: பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளா் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மற்றும... மேலும் பார்க்க

இந்திய தோ்தல்களில் வாக்களித்தாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியா்: விசாரணைக்கு உத்தரவு

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தோ்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீா் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க