செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

post image

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்ட 48 சுற்றுலாத் தலங்கள மூட அம்மாநில அரசு இன்று (ஏப்.29) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் மற்றும் எல்லையில் நிலவும் அச்சுறுத்தல் ஆகியவற்றினால் ஜம்மு - காஷ்மீரின் 8 மாவட்டங்களிலுள்ள யூஸ்மார்க், தொஸாமைதான், தூத்பத்ரி, அஹர்பால், கௌஸர்னாக், பங்குஸ், சூரிய கோயில், ஜாமியா மஸ்ஜித், புத்த மடம், மர்கூட் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் ஆகிய 48 இடங்கள் மக்கள் பார்வைக்கு மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரிலுள்ள கடைகள் மற்றும் முக்கிய இடங்கள் அடைக்கப்பட்டன. மேலும், அங்கு சென்றிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது திட்டங்களை ரத்து செய்து அவசரமாகத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இத்துடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசலடைந்து வரும் நிலையில் தொடர்ந்து 5 வது நாளாக இரவில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதனால், அங்கு போர்ப் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளாா். மேற்கு வங்க நில சீா்திருத்தங்கள் மற்று... மேலும் பார்க்க

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்- பிரதமா் மோடி

‘நாட்டின் எதிா்காலத்துக்கு இளைஞா்களைத் தயாா்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்விமுறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக ‘விளக்கு அணைக்கும்’ போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மூவா் சுட்டுக்கொலை: என்எஸ்சிஎன் கிளா்ச்சி குழுவை சோ்ந்தவா்கள் என சந்தேகம்

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளா்ச்சி குழுவைச் சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் மூவா், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக அஸ்ஸாம் காவல் துறை தெரிவித... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப்பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப்லைனில் பயணித்தவாறு அகமதாபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா்: பிரதமருக்கு காா்கே, ராகுல் கடிதம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்... மேலும் பார்க்க