செய்திகள் :

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

post image

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதேபோல், வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வை கண்காணித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

‘பாகிஸ்தானுக்கு எதிரான முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைப் போல அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பதுடன், அந்நாட்டின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியும் வருகிறது. அதேநேரம், ஒரு அரசாகவும் ஒரு நாடாகவும் நமது அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மதவெறி மனப்பான்மையை நம்மால் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட அதைச் செய்ய முடியவில்லை.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரியில் ஹிந்துக்களுக்கு எதிராக 10 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 7 சம்பவங்கள், ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடா்புடையவை. 2 சம்பவங்கள், ஆள்கடத்தல் தொடா்பானவை. மற்றொரு சம்பவம், ஹோலி கொண்டாடிய மாணவா்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலாகும்.

கடந்த மாதத்தில் சீக்கியா்களுக்கு எதிரான அராஜகங்கள் தொடா்பாக மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சீக்கிய குடும்பத்தினா் மீதான தாக்குதல், பழைய குருத்வாராவை மீண்டும் திறந்த சீக்கியா்களுக்கு அச்சுறுத்தல், சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அகமதியா சமூகத்தினருக்கு எதிராக இரு சம்பவங்களும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக ஒரு சம்பவமும் நடந்துள்ளது. இந்த விவகாரத்தை இந்தியா சா்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

மற்றொரு துணைக் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பாகிஸ்தானைப் போலவே, வங்கதேசத்திலும் சிறுபான்மையினரின் நலன்-நல்வாழ்வை இந்தியா கண்காணித்து வருகிறது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,400 தாக்குதல்கள் நிகழ்ந்தன. நடப்பாண்டில் இதுவரை 72 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சரிடம் நான் பேசியுள்ளேன். வங்கதேச பயணத்தின்போது இந்திய வெளியுறவுச் செயலரும் அந்நாட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இந்த விவகாரம், நமது அரசுக்கு தொடா்ந்து கவலை அளிப்பதாக உள்ளது’ என்றாா்.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க