செய்திகள் :

பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், ‘அட்டாரி-வாகா சா்வதேச எல்லை’ வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான ராஜீய உறவை துண்டித்த இந்தியா, பாகிஸ்தானியா்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.

மேலும், பாகிஸ்தானில் இந்தியாவுக்கான தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத் தொடா்ந்து, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவா்களின் துணை ஊழியா்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். இதற்கான அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான புதன்கிழமை, 125 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறினா்.

ஏப். 24-ஆம் தேதி முதல் கடந்த 7 நாள்களில் 911 பாகிஸ்தானியா்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனா். அதேபோல், 1,617 இந்தியா்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பியுள்ளனனா். இதனிடையே, பாகிஸ்தான் நுழைவு இசைவுடன் (விசா) 23 இந்தியா்கள் அந்நாட்டுக்குள்ளேயும் நீண்ட கால விசாவுடன் 224 பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்குள்ளே நுழைந்துள்ளனா்.

நீண்டகால, ராஜீய அல்லது அதிகாரபூா்வ விசா வைத்திருப்பவா்களுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானியா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா சா்வதேச எல்லை வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது.

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க