செய்திகள் :

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்று (மே 28) மாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மாவட்டத் தலைநகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

அங்கு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 13 வயது சிறுவன் உள்பட 2 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 15,18 மற்றும் 19 வயதுடைய 3 பேருக்கு பலத்த காயங்களும், மீதமுள்ளவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது, ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, சௌத் வசிரிஸ்தானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜுபைர் கான், ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும்; இதனால், அந்த விளையாட்டு மைதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 19 ஆம் தேதியன்று வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி பகுதியில் நடத்தப்பட்ட உறுதி செய்யப்படாத ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியாகினர்.

ட்ரோன்களைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது எனும் தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் படை மற்றும் தடைச் செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பும் ட்ரோன்களை தாக்குதல்களுக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்பெயினில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலி!

புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம்... மேலும் பார்க்க

நைஜிரியாவில் மழை, வெள்ளம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவமழை காரணமாக அந்த நாட்டின் மோக்வா நகரம் வெள்ள நீரில் முழ்கியதில் 88 போ் உயிரிழந்தனா். நைஜா் மாகாணத்தைச் சோ்ந்த அந்த நகரம் வியாபாரிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்த... மேலும் பார்க்க

பிரேஸில் குழந்தை பொம்மைக்கு குதூகலக வரவேற்பு

பிரேஸிலில் உயிருடன் இருக்கும் குழந்தையைப் போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ‘ரீபாா்ன்’ பொம்மைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் அது வைரலாகப் பரவிவரும் நிலையில், ரியோ டி ஜெனீரோ மாநகராட்ச... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கல் குவாரி இடிந்து 10 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 10 போ் உயிரிழந்தனா்; 6 தொழிலாளா்கள் மாயமாகினா். விபத்து ஏற்பட்டபோது குவாரி இடிபாடுகளுக்குள் 24 பேருக்கும் மேற்பட்டவா்கள் சிக்கிக் க... மேலும் பார்க்க

லிபியா: விபத்தில் 11 அகதிகள், ஓட்டுநா் உயிரிழப்பு

சூடான் உள்நாட்டுப் போருக்கு அஞ்சி, லிபியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஏற்றி வந்த காருடன் எதிரே வந்த லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் 11 அகதிகளும் காரை ஓட்டிவந்த லிபியா நாட்டவரும் உயிரிழந்தனா். குஃப்ரா நகருக்கு... மேலும் பார்க்க