செய்திகள் :

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

post image

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு வருவதாகக் கூறப்படும் நிலையில், தற்போது புதியதாக மற்றொரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 18 மாத பெண் குழந்தை போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. நிகழாண்டு (2025) துவங்கியது முதல் அம்மாகாணத்தில் 7 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் 4 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் தலா 1 பாதிப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் 13 பேர் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், பாகிஸ்தானின் 7 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், வைல்ட் போலியோ வகை - 1 எனும் வைரஸ் பரவி வருவதாக, அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா மற்றும் சிந்து ஆகிய மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களின் கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தபோது, அந்த மாதிரிகளில் வைல்ட் போலியோ வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, உலகில் போலியோ வைரஸின் பாதிப்பானது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் தற்போது பரவலாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்நாடுகளில் போலி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Another polio case in Pakistan, as 2025 tally climbs to 13

இதையும் படிக்க: ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விம... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், புதியதாக 232 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை தொற்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ... மேலும் பார்க்க

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க