செய்திகள் :

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

post image

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆக. 16 மாலை நிலவரப்படி, 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாகவும, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி கைபா் பக்துன்கவாவில் 327 பேர், இதில் புனோ் மாவட்டத்தில் 5,340 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் போ் உயிரிழந்துள்ளனா். 134 பேரை காணவில்லை.159 போ் படுகாயமடைந்துள்ளனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளது. 3,500 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த 2,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

Flooding in a northwest Pakistani district has killed at least 650 people

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எ... மேலும் பார்க்க

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

வாடிப்பட்டி: எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், சினிமாவில் 100 பேரை அடிக்கும் விஜய் நேரில் அடிக்க முடியுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.ம... மேலும் பார்க்க

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

சூலூா்: தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தார்.கோவை நீலாம்பூா் பகுதியில்... மேலும் பார்க்க

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைக... மேலும் பார்க்க

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.இதுகுறித்து புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

பாபநாசம்:தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில்2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க